நோய்களின் கற்பனைகளும், உடல் நலத்துக்கான வழிகளும்

இயற்கை காய்கறிகள், பழங்கள்

இயற்கையோடு இணைந்து வாழ்தல், அளவறிந்து உண்ணுதல் மூலம் உடலுக்கான ஆற்றலை பெற முடியும்.இயற்கையின் இயல்பே நல்ல உடல்நலத்தோடு இருப்பதுதான். உடலிலிருந்து கழிவுகளை நீக்கி கொண்டே வந்தால், உடலுக்கான ஆற்றல் தானாகவே வளரும். நீங்கள் நினைப்பது போன்று புற்றுநோய் என்பது பரம்பரையாகவோ, கிருமிகளாலோ வருவதில்லை. தவறான உணவுப் பழக்கத்தினாலும், மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளாலேயே வருகிறது. உடலிலுள்ள விஷத்தையும், மனத்திலுள்ள விஷத்தையும் அகற்றினால் புற்றுநோயிலிருந்து எளிதில் குணமாகலாம். இதற்கு இயற்கையான சிகிச்சை முறைகளைத்தான் பழகவேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரைகளை சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

அதேபோன்று மனத்துக்கும் தியானம் போன்ற இயற்கை முறை சிகிச்சைகளை கொடுக்கிறேன். இதன்மூலமே புற்றுநோயிலிருந்து நிறைய பேரை மீட்டு எடுத்திருக்கிறேன். காலின் கேம்பல் என்பவர் 40 வருஷமாக புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். ஆராய்ச்சியின் முடிவில் தவறான உணவு பழக்கமே புற்றுநோய்க்கு காரணம் என்று தெரிவித்தார். புற்றுநோய் வருவதற்கு பாலை அதிகளவில் எடுத்துக் கொள்வதும் ஒரு காரணம். பாலில் ‘கேசின்’ என்ற பொருள் புற்றுநோயை உண்டாக்க கூடியதாக இருக்கிறது. வளர்ந்த பிராணிகள் எதுவும் பாலை அருந்துவதில்லை. மனிதன் மட்டுமே பாலை அருந்துகிறான்” என்றவரிடம், “பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட, மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள், பழங்களை சாப்பிடலாமா?” என்ற கேள்விக்கு, “முடிந்தளவு ஆர்கானிக் உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. வேறு வழியில்லையென்றால் மட்டுமே இவற்றை எடுத்துக் கொள்ளலாம்” என்று பதிலளித்தார்.

சர்வதேச தமிழ் தாவர உணவாளர்கள் சங்க நிறுவனர் அசோக்குமார் பேசும்போது, “பார்சிகள் இனத்தில் இறந்த உடலை கழுகுக்காக மலையின் மீது சாப்பிட வைப்பார்கள். சமீப காலங்களில் இறந்த மனிதனின் உடலை சாப்பிட்ட கழுகுகள் இறந்து போய்விடுகிறதாம். அந்தளவுக்கு மனிதனின் உடல் நஞ்சாக மாறியுள்ளது. ஃபாஸ்ட் புட், ஜங்க் புட், அதிகமான அசைவ உணவுகள் என்று நாளுக்கு நாள் நமது உணவு பழக்கம் மாறிக் கொண்டே வருகிறது. நோய்கள் அதிகரிப்பதோடு, வன்முறையும் நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகம் சமைக்கப்பட்ட அரிசி உணவுகளை எடுத்துக் கொள்வது, அளவுக்கதிகமாக உண்பது போன்ற காரணங்களால், உடல் பருமன் நோய் வாட்டி வதைக்கிறது. உடல் பருமன் அனைத்துவிதமான நோய்களுக்கும் காரணமாக இருந்து வருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு, 30 வயசுக்கு மேல் அரிசி உணவை குறைத்துக்கொள்வது நல்லது. சமைக்கப்படும் உணவு மசாலா, எண்ணெய் ஆகியவை சேர்த்து சமைக்கப்படுகிறது. அரை வயிறு சாப்பிட்டாலே ஆரோக்கியமா வாழலாம்.

அதனால்தான் வன்முறையற்ற உணவு என்ற பெயரை இயற்கையான தாவர உணவுகளுக்கு பெயர் வைத்து அழைக்கிறோம். எங்கள் தாவர உணவாளர்கள் சங்கத்தின் மூலமாக காய்கறிகள், பழங்கள், கீரைகளை சமைக்கப்படாமல் இயற்கையாகவே உண்ணவே பரிந்துரைத்து வருகிறோம். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பொதுமக்களுக்கான கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம். மனிதநேயமிக்க சமூகத்தை உருவாக்கும் நோக்கோடு செயல்பட்டு வருகிறோம். உங்கள் உணவே, உங்களை வெளிப்படுத்தும் மதிப்பீடு. 2012 ஆம் ஆண்டில் 7 லட்சம் பேர் இந்தியாவில் புற்றுநோயால் இறந்துள்ளனர். வளர்ந்து வரும் மோசமான உணவு பழக்கங்களே இதற்கு காரணம்” என்றார்.

இயற்கை உணவுகளை எப்படி எடுத்து கொள்வது பற்றி பேசினார் உடல்நல ஆலோசகர் டாக்டர் சரவணன், “தாவர உணவுகளே மனிதர்களுக்கான அடிப்படையான உணவு. இதில் பழங்கள், காய்கறிகள், கீரைகள், பயறு, பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். காலையில் பழங்களை மட்டுமே உண்பது நல்லது. மதிய வேளையில் முளைகட்டிய பயறு வகைகள், காய்கறிகள், கீரைகளை சாப்பிடலாம். இரவு வேளையில் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். பழங்களோடு காய்கறிகள் சேர்த்து உண்ண விரும்புபவர்கள் முதலில் பழங்களையும், பிறகு காய்கறிகளையும் சாப்பிடலாம். நல்ல உடல்நிலையில் இருப்பவர்கள் இந்த உணவு பழக்கத்துக்கு மாறிய பிறகு, அடிக்கடி ஊட்டச்சத்து நிபுணரிடம் வைட்டமின்கள், சத்துக்களின் சரிவிகிதம் குறித்து அடிக்கடி சோதனை செய்து கொள்வது நல்லது. நோய் உள்ளவர்கள், அதற்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் உரிய மருத்துவரின் ஆலோசனைபடி சாப்பிடுவது நல்லது” என்றார்.

டாக்டர் தாமஸ் லோடி சொன்ன சில டிப்ஸ்:

1. உடலானது அதுக்கு என்ன தேவையோ அதற்கு தகுந்தபடி தகவமைத்துக் கொள்ளும் தன்மையுடையது. சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, அந்தந்த சீஷன்களில் கிடைக்கக்கூடிய காய்கறிகள், பழங்களை சாப்பிட வேண்டும். பிரிட்ஜில் வைத்த பழங்களை பயன்படுத்தாதீர்கள்.
2. அமெரிக்க உணவு முறையான ஜங் புட்டை பின்பற்றாதீர்கள். உங்கள் நாட்டின் உணவை சாப்பிடுவதே உடலுக்கு நல்லது.
3. முடிந்தளவு இயற்கையான சூழலில் இருக்க பழகுங்கள்.
4. தனியாக தியானம் பண்ணுங்கள்.
5. சூரிய ஒளி உடல் மீது படும்படி உலாவுங்கள். ஷூ போடாமல் நடந்து செல்லுங்கள்.

உணவு ஆர்வலர் குமரேசன் கூறும்போது, “இயற்கை விவசாய முறையில் கொடைக்கானலில் உள்ள பண்ணையில் காய்கறிகளை உற்பத்தி செஞ்சு சாப்பிடுறேன். கடந்த ஒரு வருடமாக இயற்கை காய்கறிகளை மட்டுமே சாப்பிடுகிறேன். எனக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. இயற்கை காய்கறிகளை சாப்பிட ஆரம்பிச்ச பிறகு, சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திட்டேன். சர்க்கரையின் அளவு சரியாக இருக்கிறது. முதலில் பால், தயிர், மோர் சாப்பிடுவதை நிறுத்தினேன். பிறகு அரிசி உணவுகளை தவிர்த்தேன். இப்போது காய்கறிகள், பழங்களை சாப்பிட்டு வருகிறேன். உண்மையான ஆர்வத்தோடு, இயற்கை உணவுகளை உண்டால் நோயிலிருந்து உடலை காப்பாற்றி கொள்ளலாம்”.

47 ஆண்டுகளாக தேங்காய், வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு வரும் இயற்கை உணவாளர் மு.அப்பன் பேசும்போது, “என்னுடைய 20 வயதில் குஷ்டம் நோயால் அவதிப்பட்டேன். எங்கெங்கோ வைத்தியம் பார்த்தும் சரியாகலை. அப்போ ஆசிரியரான என் அண்ணன், கொடுத்த யோசனைப்படி இயற்கை உணவுகளை எடுத்துக்கிட்டேன். அந்த நோய் ஒரு வருஷத்திலேயே குணமாகிருச்சு. இப்பவும் அப்படியேதான் இயற்கை உணவை சாப்பிட்டு வர்றேன். முதல்ல சாப்பாட்டை வேகவைச்சு சாப்பிடுறத நிறுத்தினேன். அப்புறம் தேங்காய், வாழைப்பழம், இதோடு சீசன்ல பேரிச்சம்பழம், மாம்பழம் சாப்பிடுவேன். மனிதன் பசிச்சாதான் சாப்பிட வேண்டும். அதையும் நன்றாக மென்னு சாப்பிடணும். மனிதன் ஒருவன்தான் உலகிலேயே சமைத்து சாப்பிடக் கூடியவன். ஆனால் அவனுக்குத்தான் எத்தனைவிதமான நோய்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.