வியக்கும் நற்குணங்களைக் கொண்ட விளக்கெண்ணெய்!

மலக்குடலின் இயக்கத்தை மேம் படுத்தி மலச்சிக்கல் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கிறது. பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இதை மலச்சிக்கலுக்கு என்று இல்லாமல் குடலை தூய்மைப்படுத்த உபயோகித்தார்கள். சில நேரங்களில் இந்த எண்ணெயின் பிசுபிசுப்பும் வாசமும் ஒவ்வாமையை ஏற்படுத்தினாலும் இது வேறு விளைவுகளை ஏற்படுத்திவிடாது.

மந்தமாக இருப்பவர்களைப் பார்த்தால் கிராமத்தில் வேடிக்கையாக விளக்கெண்ணெய் மாதிரி இருக்காதே என்று சொல்வார்கள். ஆனால் விளக்கெண்ணெயின் பயன்கள் தெரிந்து கொண்டால் யாரையும் மறந்து கூட அப்படி சொல்ல மாட்டீர்கள்.

விளக்கெண்ணெயைப் பற்றி தெரிந்துகொள்வற்கு முன்பு எண்ணெய் வகைகளைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் பழங்காலத்தில் புழக்கத்திலிருந்த எண்ணெய் வகைகள் என்ன என்று பார்த்தால் எள்ளிலிருந்து பெறப்படும் நல்லெண் ணெய், நிலக்கடலையிலிருந்து பெறப்படும் கடலை எண்ணெய், ஆமணக்கு விதையிலிருந்து பெறப்படும் விளக் கெண்ணெய், கடுகு எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவைதான் பிரதானமாக இருந்தது.

பிறகு உணவிலும் நுழைந்த நவீன ஆதிக்கத்தால் மக்கள் இந்த எண்ணெயிலிருந்து படிப்படியாக ரீபைண்டு ஆயில் (சூரி யகாந்தி) எண்ணெய்க்கு மாறினார்கள். தற்போது நல்ல கொழுப்புகளை நமது பாரம்பரிய எண்ணெய் தான் உருவாக்கு கிறது என்ற விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது.

விளக்கெண்ணெய்:

தாவரங்களிலிருந்து பெறப்படும் எண்ணெய்கள் சத்துக்கள் மிகுந்தவை என்று சொல்லப்படுகிறது. அப்படியான சத்துக்கள் நிறைந்த மருத்துவ குணமுள்ள எண்ணெய்தான் ஆமணக்கு விதையிலிருந்து பெறப்படும் ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்.

எண்ணெய்கள் பொதுவாக அடர்த்தி குறைந்து காணப்படும். ஆனால் விளக்கெண்ணெய் அடர்த்தியாக இருப்பதோடு ஒரு வித பிசுபிசுப்பையும் கொண்டிருக்கும். இதன் விதைகள் நச்சுத்தன்மையைக் கொண்டிருந்தாலும் இதிலிருந்து பெறப் படும் எண்ணெயில் நச்சுத்தன்மை இருப் பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மூன்றுவிதமான விளக்கெண்ணெய் கடைகளில் கிடைக்கிறது. ஒன்று ஆமணக்கு செடியிலிருந்து பெறப்படும் எண்ணெய். இது ஆர்கானிக் விளக்கெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. இதிலிருக்கும் வேதிப்பொருள்களை நீக்கி பயன்படுத்தி னால் மேலும் நன்மைகள் உண்டாகும். இந்த எண்ணெய் பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

கருப்பு ஆமணக்கு எண்ணெய் என்பது விதைகளிலிருந்து நேரடியாக எண்ணெய் எடுக்காமல் வறுத்து அதன் பிறகு எண் ணெய் எடுப்பது. இது பார்க்க கறுப்பாக புகை வாசனையோடு இருந்தாலும் சருமத்தை அழகாக வைத்திருக்கவும் முகப் பருக்கள், வடுக்களை நீக்கவும் உதவுகிறது.


ஹைட்ரஜன் சேர்த்து உருவாக்கப்படும் இந்த விளக்கெண்ணெய் ஹைட்ரோஜெனரேட்டட் விளக்கெண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. இது நீரில் கரையாது என்பதோடு அதிக கடினத்தன்மையும் கொண்டிருக்கும். இவற்றை அழகு சாதன பொருள்களில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

சிறந்த மலமிளக்கி:

விளக்கெண்ணெய் மலமிளக்கியைத் தூண்டும் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. மலக்குடலின் இயக்கத்தை மேம் படுத்தி மலச்சிக்கல் பிரச்னைகளைத் தீர்த்துவைக்கிறது. பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இதை மலச்சிக்க லுக்கு என்று இல்லாமல் குடலை தூய்மைப்படுத்த உபயோகித்தார்கள்.


சிறு வயது குழந்தைகளாக இருந்தாலும் காலையில் வெறும் வயிற்றில் கால் தம்ளர் மிதமான வெந்நீரில் 5 முதல் 10 சொட்டு கள் வரை (வயதுக் கேற்ப) விட்டு கலந்து குடிக்க வைத்தால் அடுத்த சில மணிநேரத்தில் குடலில் இருக்கும் அழுக்குகள் வெளியேறிவிடும். பெரியவர்களும் விளக்கெண்ணெய் சிகிச்சையின் மூலம் குடலை சுத்தம் செய்து கொண்டார்கள்.

முன்னோர்கள் இரவு நேரம் வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் தோய்த்து சாப்பிட்டார்கள். மருந்து குழம்பு வைக்கும் போது தாளிப்பில் விளக்கெண்ணெய் பயன்படுத்தினார்கள். விளக்கெண்ணெய் அதிக குளிர்ச்சித்தரக்கூடியது என்பதால் அடிக்கடி எடுக்காமல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது பருவ காலத்துக் கேற்ப ஆறுமாதங்களுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்வது ஆரோக்யம் காப்பதோடு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are makes.